அநாதை

உணர்ச்சிகளின்
ஆரம்பம்
தடுக்க இயலாத
பூகம்பம்

புணர்ச்சியில்
அகப்பட்டு
புனிதத்தை
இழந்ததனால்
கல்லாத பேறு
பெற வேண்டி
இப்பொல்லாத உலகத்தில்
பெற்றதனை
யாரும் அறியும் முன்னே
வீசி எறிந்ததினால்
அநாதை என ஆக்கப்பட்டோம்

பூக்கின்ற
பூ
அறியுமா ?
காய்ந்த சருகாகுமா
இல்லை
இறைவனவன் தோள்
சேருமா ?

யாரோ
இருவரின்
ஆசைக்கு
அடையாள உயிர்
ஆனோம்
முதல் எழுத்து
தொலைந்தினால்
சமுதாயம்
இட்ட பெயரோ
அநாதை என...

உலகுக்கு
எனை காட்ட
துணிவில்லை
எனும் போது
உறை அணியக்
கூடாதா ?

எழுதியவர் : த பசுபதி (20-Sep-18, 7:41 pm)
சேர்த்தது : பசுபதி
Tanglish : anaathai
பார்வை : 229

மேலே