என்னவள்

கற்பனைகள் விற்பனை
இங்கே இலவசமாக - என் மனதில்
மொத்தமாக குத்தகை எடுத்தாள்
ஏழையான என்னவளும்.!

சக்கரைக்கு சாபமிடும்
சக்கரவர்த்திகளே....அளவோடு இட்டுக்கொள்ளுங்கள்.,
பேச்சிலும்,மூச்சிலும்
என்னவள் சக்கரைக்கு முதலாளி.!

மண்பானை மங்கையவள்
மலர்களுக்கு மணங்களை
வாடகைக்கு விடுகிறாள்...!

எழுதியவர் : ஷெரிப் (21-Sep-18, 9:49 pm)
சேர்த்தது : உமர்
பார்வை : 129

மேலே