பெரியார்

ஈரோடு சமூகத்திற்கு
ஈன்றுக்கொடுத்த ஈகை! வடக்கே
காசிநாதனை காணச்சென்ற கண்கள்
கண்டதோ தீண்டாமையதனை!
பசிக்கு உண்ட எச்சில் இலையுணவு
பாடமென கற்பித்தது
பல்வேறு கொள்கைகளை!
சுயமரியாதைச்சுடரால்
தீண்டாமையை தீயிட்டு கொளுத்தி
திருத்தப்பட்ட சமூகத்தின் திறவுகோல்!
வைக்கம் அறப்போர்
வருணிக்கும் வைராக்கியத்தை!
மறுவாழ்வு மலர்மாலையை கைம்பெண்
கழுத்தில் சூடி...
கடவுளை மறுப்பேன் ஆனால் அவரை
வணங்குபவர் உரிமை மறுக்கப்படும் போது
உரிய குரலும் கொடுப்பேனென உரைத்தாய்!
சமத்துவத்தின் சங்கை ஒலித்து
சாதியத்திற்கு கொடுக்கப்பட்ட சவுக்கடி!
தொண்டிற்கு முந்தி
தலைமைக்கு பிந்திய
தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீசே!
வெண்மை படர்ந்த தாடியதும்
வயதான நிலைக்கு ஊன்றிய தடியும்
தளர்ந்த உம் கால் நடையும்
தளராத உம் சொல் உரையும்-சமூக
சீர்திருத்தத்தின் சிறப்பம்சம்!
சமத்துவமென்ற சொல்லின்
சத்தத்தினுள் ஒளிந்திருக்கும்
உருவமே #பெரியார்

எழுதியவர் : நடராஜன் அச்சுமல்லையன் (25-Sep-18, 11:17 pm)
பார்வை : 41

மேலே