இன்னொரு முறை

பத்து வருடங்கள்
உன் பாதம் தொடர்ந்து,
உன் விரல்படும்
ரோஜாவின் மனம் நுகர்ந்து,
என் காதலை மட்டும்
கருவாகக் கொண்டு,
காத்திருத்தலை சுகமாகக்
கொண்டேனடி பெண்ணே..
உன் இதழ்களின் புன்னகையில்
புதைத்து வைத்திருக்கும்,
காதலை மூன்று வார்த்தைகளில்
ஒருமுறை சொல்லிவிட்டு,
ஓடிவிட்டாயடி! பெண்ணே...
என் காதல் பரிசாக
இன்னொரு முறை
சொல்வாயடி பெண்ணே!
என் காதல் கண்ணே!

எழுதியவர் : கௌசல்யா ஜெயக்குமார் (26-Sep-18, 2:16 pm)
சேர்த்தது : kowsalya jayakumar
Tanglish : innoru murai
பார்வை : 381

மேலே