kowsalya jayakumar - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : kowsalya jayakumar |
இடம் | : namakkal |
பிறந்த தேதி | : 30-May-1998 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Sep-2018 |
பார்த்தவர்கள் | : 182 |
புள்ளி | : 17 |
சிரிக்க மட்டும் கற்றுக்கொண்டவள் ....கவிதையின் மீது காதல் கொண்டவள்....பெற்றோர் உலகத்தில் வாழும் அமைதியான பறவை....
எவனொருவன் தலைவனைத் தேடுகின்றானோ
அவனே அடிமையாகின்றான்;
எவனொருவன் தலைமையைத் தேடுகின்றானோ
அவனே தலைவனாகின்றான்..
அழகே பொறாமை கொள்ளும் அழகு!
அடக்கமே தோற்றுப்போனது அவளிடத்தில்..
அவளைப் பார்த்த மறுநொடியில்,
விழி மறந்தேன்;
வழி மறந்தேன்;
சொல் மறந்தேன்;
செயல் மறந்தேன்;
என்னையே மறந்தேன்;
உன்னையே நினைத்தேன்;
நீ நினைக்கவும் தேவையில்லை ,
அணைக்கவும் தேவையில்லை என்றேன்;
அவள் இதழோரம் புன்னகைத்துச் சென்றாள்!
என் இதயத்தை திருடிச் சென்றாள்;
அவள் புன்முறுவல் போதும்,
இந்த யுகம்முழுக்க எனக்கு இன்முறுவல்தான்....
தோல்வி காண்பதும் ஒரு சுகமே;
உன்னிடம் தோல்விக்காண்பது ஒரு வரமே;
அந்தவரம் கிட்டநான் கொண்ட தவமே,
உன்மீது நான்கொண்ட காதலென்னும் சாபமே...
தோல்வி காண்பதும் ஒரு சுகமே;
உன்னிடம் தோல்விக்காண்பது ஒரு வரமே;
அந்தவரம் கிட்டநான் கொண்ட தவமே,
உன்மீது நான்கொண்ட காதலென்னும் சாபமே...
தோல்வியைக் கண்டு கலங்காதே;
வேதனையைக் கண்டு விலகாதே;
துன்பத்தை துச்சமாக்கி,
புன்னகையை புதுமையாக்கி,
வேதனையை விட்டொழித்து,
கண்ணீரை மூழ்கடித்து,
முயற்சியை விண்ணாக்கி,
விடியலை எதிர்நோக்கு..
விடியலை வீணாக்காமல்,
விடிந்தபின் யோசிக்காமல்,
வெற்றியை இலக்கணமாக்கி,
வாழ்க்கையை உரைநடையாக்கு.
பத்து வருடங்கள்
உன் பாதம் தொடர்ந்து,
உன் விரல்படும்
ரோஜாவின் மனம் நுகர்ந்து,
என் காதலை மட்டும்
கருவாகக் கொண்டு,
காத்திருத்தலை சுகமாகக்
கொண்டேனடி பெண்ணே..
உன் இதழ்களின் புன்னகையில்
புதைத்து வைத்திருக்கும்,
காதலை மூன்று வார்த்தைகளில்
ஒருமுறை சொல்லிவிட்டு,
ஓடிவிட்டாயடி! பெண்ணே...
என் காதல் பரிசாக
இன்னொரு முறை
சொல்வாயடி பெண்ணே!
என் காதல் கண்ணே!
மானுடம் போற்றும்,
பாரதப் பெருநாட்டில்,
அறம் கொண்ட மனிதனும்,
அடம் கொண்ட மனிதனும்,
ஒருசேர சுவாசிக்கும் சுதந்திரத்தில்,
காற்றான காந்தியத்தின்
சாத்தியம் இப்பொழுதும்
எப்பொழுதும்.....
பாரதத்தின் மூச்சோடு.....
இரு மனங்கள் இணைந்தால்
அது காதல்;
இரு கரங்கள் இணைந்தால்
அது நட்பு;
இங்கே,
மனமும் இல்லை;
கரமும் இல்லை;
இருந்தாலும் இணைந்துகொண்டோம்,
நீ ரோஜா மொட்டாகவும்,
நான் முட்களாகவும்,
இதற்கு பெயர் என்னவோ??