வாழ்நாள் உலவாமுன் ஒப்புர வாற்றுமின் – நாலடியார் 22

நேரிசை வெண்பா

வாழ்நாட்(கு) அலகா வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅ தெழுதலால் - வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின்; யாரும்
நிலவார் நிலமிசை மேல். 22

யாக்கை நிலையாமை, நாலடியார்

பொருளுரை:

ஆயுள்நாட்களுக்கு அளவு காணும்படி விளக்குகின்ற கதிரவன் என்னும் ஒளிவட்டம் வீண் நாள் படாமல் தொடர்பாகக் தோன்றி வருவதனால் அம் முறையே கணக்கிடப்பட்டு ஆயுள்நாள் அற்றுப் போகுமுன் உதவி செய்யுங்கள்;

அந்த ஆயுள் நாளுக்குமேல் யாரும் இவ்வுலகத்தில் நிலைக்க மாட்டார்கள்.

கருத்து:

கதிரவன் நாடோறுந் தோன்றுதலால் நாட்கணக்குத் தெரிதலின், அக் கணக்குக் கொண்டு வாழ்நாள் கழியுமுன் அறஞ்செய்து கொள்க.

விளக்கம்:

அலகா - அலகாக, அஃதாவது அலகு கண்டு கொள்ளும் வகையில், அலகு - அளவு;

ஒளி மண்டிலம் - இங்கே பகலவன். ஒரு நாளாவது தவறாமல் என்றற்கு ‘வீழ்நாள் படாது' எனப்பட்டது.

வீழ்நாள்; தவறும் நாள்; தப்பிப்போகும் நாள் உண்டாகாதபடி என்பது பொருள்.

நிலவார் என்பதற்கு பகுதி நில் என்பதாகலின், நிலைக்கமாட்டார் எனப் பொருளுரைக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுதலாலேயே இருவரறிவும் ஒத்து இணக்கமுறுதலின், உதவி ‘ஒப்புரவு' எனப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Sep-18, 8:24 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 60

சிறந்த கட்டுரைகள்

மேலே