இயற்கையில் ஓர் ஜுகல்பந்தி இசை விருந்து

அந்த கானகத்தில் எத்தனையோ எத்தனையோ
மரங்கள் இருந்த போதிலும் அன்று
அங்கிருந்த மூங்கில் புதரை நாடி வந்தது
கருநீல குயில் அது வந்து மூங்கிலில் அமர்ந்து
ஒய்யாரமாய் ஆட, பாட நாட்டம் வந்ததோ
'குக்கூ, குக்கூ என்று குரல் திறந்து
கூவிட , அந்த இனிய மீட்டலைட் கேட்டோ ஏனோ
தென்றல் வந்து மூங்கிலைத்தீண்ட
அது தந்ததே இனிய குழலோசை -அது
குயிலோசையுடன் சேர்ந்து இயற்கை அங்கு
என் காதிற்கு விருந்தளித்தாள் ஓர் ஜுகல்பந்தி
குயிலோசையுடன் மூங்கில் தந்த குழலோசை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Sep-18, 9:36 am)
பார்வை : 164

மேலே