வழிந்தோட பார்க்கும் விழிகள்

வழிந்தோட பார்க்கும் விழிகள்
நின்றிட விரும்பிடும் இதயம்
இரைச்சலுக்கு ஏங்கும் செவிகள்
உரச விரும்பாத இதழ்கள்
தென்றலுக்கு தீயூட்டும் தேகம்
மூச்சை வெறுக்கும் நெஞ்சம்-உன்னை
மறக்க மறுக்கும் சின்னமனசு

எழுதியவர் : காசி.தங்கராசு (7-Oct-18, 6:27 am)
பார்வை : 110

மேலே