காலம். போச்சு !
அண்டை வீட்டுப் பெண்ணொருத்தி சன்னல்வழி
கெண்டையொத்த அன்னவளின் சின்ன விழி
கொண்டு எனை நோக்கி யவள் சொன்ன மொழி
கண்டு மனம் சென்றது ஏன் காதல் வழி ?
காதலது வந்ததனால் காலம் போச்சு ,
காலமது போனதினால் கல்வியும் போச்சு,
கல்வியது போனதினால் வாழ்க்கையும் போச்சு.
வாழ்க்கையும் போனதினால் வாட்டமாகிப் போச்சு!