மறந்து விட்டாயா....?

மறந்து விட்டாயா..? என
கேட்பதற்கு பதில்..
மறித்து விட்டாயா..? என்று
கேட்டிருக்கலாம் நீ.....,

உன்னை
மறக்க செய்யும்
எல்லா
கேளிக்கைகளையும்
மறுத்து வந்திருக்கிறேன்
தொடர்ந்து..

ஏனென்றால்
உன்னை மறப்பதென்பது
முழுமையாய்
இறப்பதற்கு சமானம்..!!

கண்கள் சலிக்காத ஒரே ஓவியம்
நீ -என்
உயிர் பதித்துக்கொண்ட ஒரே உலகம்
நீ...!!

எத்தனை பெரிய மறதிக்காரனுக்கும்
விதிவிலக்கு நீ..
எத்தனை பெரிய மருத்துவனுக்கும் பிடித்து போகும்
அழகுதோஷம் நீ..!!

பெண்ணினத்தில்....
அழகு ஜென்மம் நீ...!!
ஆண்ணினத்தின்...
பல ஜென்ம கனவு நீ..!!

நமக்கு பின்
காதலிக்க தொடங்கியவன்
கைகுழந்தையோடு குல தெய்வ கோவிலுக்கும்
போய் விட்டான்....,
இன்னும்
நம் காதலில்
நான்
வெறும் பார்வையாளனாக மட்டும்...!!

எழுதியவர் : Kovai sathish (21-Aug-11, 7:15 pm)
சேர்த்தது : kovai sathish
பார்வை : 688

மேலே