மருவுமின் மாட்சிமைப்பட்ட நல்லோர் கூறும் அறம் – நாலடியார் 36

(மெல்லின எதுகை) நேரிசை வெண்பா

இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் - றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம். 36

- அறன் வலியுறுத்தல், நாலடியார்

பொருளுரை:

இன்றோ அன்றோ என்றோ என்று இகழ்ந்திராமல் பின்னாலேயே நமன் இருக்கின்றான் என்று மதித்து தீய செயல்களை நீக்குங்கள். மாட்சிமைப்பட்ட நல்லோர் கூறும் அறச் செயல்களை இயன்ற வகையினால் தழுவிச் செய்யுங்கள்.

கருத்துரை:

கூற்றுவன் எந்த நேரத்திலும் வருவான் என்று கருதி உடனே நல்லன செய்யவேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Oct-18, 5:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 66

மேலே