பூக்களே உங்களை
பூக்களே உங்களை
பாவை சூடினாள்
அவள் புன்னகை இதழ்களுட ன்
மலர்ந்து சிரிக்கிறீர்கள் !
பூக்களே உங்களை
இறைக்காலடியில் அருச்சிக்கிறான் பக்தன்
மலர்ந்த அழகுடன்
மௌனத் துதி பாடுகிறீர்கள் !
பூக்களே உங்களை
மாலையாக்கி மணப்பந்தலில் சூடினர்
வாழ்வின் வசந்தத் தோட்டமாய்
இல்லறமாய் நித்தம் மலர்ந்து சிரிக்கிறீர்கள் !