பூக்களே உங்களை

பூக்களே உங்களை
பாவை சூடினாள்
அவள் புன்னகை இதழ்களுட ன்
மலர்ந்து சிரிக்கிறீர்கள் !

பூக்களே உங்களை
இறைக்காலடியில் அருச்சிக்கிறான் பக்தன்
மலர்ந்த அழகுடன்
மௌனத் துதி பாடுகிறீர்கள் !

பூக்களே உங்களை
மாலையாக்கி மணப்பந்தலில் சூடினர்
வாழ்வின் வசந்தத் தோட்டமாய்
இல்லறமாய் நித்தம் மலர்ந்து சிரிக்கிறீர்கள் !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Oct-18, 9:12 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

மேலே