நட்புடன் காதல்

நீ ஏற்றிய தீயோ எரிகிற போது அனைக்கவா தோன்றும்
மனம் உன்னையே ஏங்கும்

உனக்கு என்ன போச்சு பார்த்து விட்டு போனாய் பத்திக் கொண்டது எனக்கே எனக்கே

விட்டு விட்டு பேசும் இதயம் கூட
ஓடிகிட்டே இருக்கு இடைவெளி இன்றி உன் பெயரை கேட்டால்

எத்தனை நாள்தான் பொறுமையில் நானும்
உன் முகம் கண்டால்
உளறிடுவேனோ
உள்ளத்தில் போர்க்களம்
நித்தமும் இங்கு நொடிக்கு ஒரு தரம்


நட்பில் மறைந்த காதல் வெளி வர
என்னில் கறைந்து உன்னை தொடவா
இல்லை
என்னை களைந்து உன்னை விடவா


உன்னை காணும் பொருட்டே
சதம் எடுத்தேன் வருகை பதிவில்
அப்போது எல்லாம் பூஜ்யத்திலும்
உன் முகம் தான் தெரிந்தது அது பாடமாக இருந்தாலும்

பூஜ்யம் எல்லாம் கோடிகளாகும்
உன்
ஒரு வார்த்தையில்
அந்த நம்பிக்கையில் மட்டுமே
உன் எதிரே உயிருடன் உலாவும்...

எழுதியவர் : த பசுபதி (14-Oct-18, 9:58 am)
சேர்த்தது : பசுபதி
Tanglish : natbudan kaadhal
பார்வை : 125

மேலே