காதல் -அவள்-அவன்-அவள் தோழி

உன்னை முதல் முதலாய்
பார்த்தபோதே உன்னை
எனக்கு பிடித்துப்போனது
அந்த இன்பத்தில் என்
இதயம் வேகமாய் படபடத்தது
எனையறியாமலே என் கண் இமைகள்
மூடி மூடி திறக்க என்னை அறியாமலே
என் கண்கள் உன் கண்களைத் தேட
என் பக்கத்தில் அப்போதிருந்த என்
தோழி சொன்னாள், 'அடியே என்
உயிர்த்தோழி, உனக்கு இப்போது
நன்றாகவே பிடித்துக்கொண்டது
காதல் பெருஞ்சுரம் , இனி உனக்கு
நான் தேவையில்லையடி , உனக்குள்
இத்தனை தீ மூட்டி ஒன்றும் தெரியா
குழந்தைபோல் உனைப்பார்த்து
உன் பதிலுக்கு ஏங்கி நிற்கின்றானே
அங்கு அதோ அந்த மன்மதன் அவனே
தான் உனக்கு தேவை அறிந்துகொள்ளடி
இனியும் ஏன் தாமதம் ....இதயுமாடி நான்
சொல்லி தரவேண்டும்........ அவனை
கண்ணோடு கண் சேர்த்திடப் பார்
அவன் உன்னை பார்க்க, உந்தன்
வலக்காலால் கோலம் வரைந்திடு
அவனைப் பார்த்தும் பார்காததுபோல்
உன் வலக்கையில் கட்டை விறல் நகத்தை கடித்திடு
குனிந்த தலையால் மீண்டும் அவன் கண்களை நீ பார்க்க .....
இவற்றைப் பார்த்து உன் சம்மதம் அதுவே
என்று அவன் தெரிந்துகொள்ள , இன்னும்
என்ன சொல்ல, என் செல்ல தோழி
உங்கள் காதல் பயணம் தொடங்கிவிடும்
அதற்கு நான் மறைந்திருந்து காட்டவா
பச்சைக்கொடி சொல்லடி என் பிரியா சகி.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Oct-18, 11:18 am)
பார்வை : 97

மேலே