வலிகளும், வசந்தங்களும்

வருஷமெல்லாம் வசந்தகாலமாய் இருந்தால்,
வண்ணத்துப்பூச்சிகள் கூட வறுமையில் தான் வாடும்.
எனவே,
எக்காலமும் இனிதே உன் சோம்பலை முறித்தால்.!

சோர்வுகள்
சூரியனுக்கு இல்லையென்றால் -
மண்ணில் மழைகள் ஏது?

மரத்தின் பாரம்
பூமிக்கு இல்லையென்றால் -
நிழல்கள் ஏது?

உளிகளை கற்கள் தாங்காமல் - உலகில்
சிலைகள் ஏது?

வலிகள் வந்தபின்புதான் பலநேரம்,
பலபேருக்கு வாழ்க்கையே வசந்தமாய் மாறுகிறது.

எழுதியவர் : கவிஞர்.விஜெ (17-Oct-18, 12:14 pm)
சேர்த்தது : கவிஞர் விஜெ
பார்வை : 469

மேலே