போலிகள்

கண்ணியம் இல்லாதவன் காலில் விழும் முட்டாள்கள் பெருகி வரும் வேளை இது!
பகுத்தறிவு இறந்து போன நிலையில் அதைச் செய்வேன்!
இதைச் செய்வேன்! என்று பணம் பறிப்பதிலேயே உள்ளது சாமியார்களின் பித்தலாட்டங்கள்!

அடடே வாயிட்டே வடை சுடுவார்கள் என்பதை பார்த்து இருக்கிறீர்களா? அந்த சாமியார் கூட்டத்தையும் அந்த சீடர்கள் கூட்டத்தையும் பாருங்க புரியும்.

கடவுள் இல்லை என்பவனை விட தன்னை தானே அவதாரமாகக் கூறிக் கொண்டு சாமியார்கள் காலம் காலமாக முட்டாள்களை அடிமைப்படுத்தி வந்தார்கள் என்பது தான் உண்மை.

பகுத்தறிவு கொள்கை என்றார்.
பாவம்! மக்களுக்கு புரியும்படி எடுத்துரைத்தாரா?
மறைக்கப்பட்ட உண்மைகள் பல,
பூசப்பட்ட வர்ணங்கள் பல,
பகுத்தறிவாதிகளாய் மக்களை ஏமாற்றி சேர்த்து வைத்து சொத்துகள் பல.

கடவுள் என்ன செய்வான்?
பாவம்! அவனைத்தான் கற்சிலையாக்கி கடத்தி விளையாடுகிறார்களே!
கபட நாடக வேடதாரிகளை நம்பிய மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
நம்பியவர்களுக்கே தூரோகம் செய்யும் அரசியல் நாடக உலக வாழ்க்கையில் யாரும் நம்பிக்கைக்கு உரியவர் இல்லையப்பா!
காவிகளும், வெள்ளை வேட்டி பகுத்தறிவாதிகளையும் எட்டி வையுங்கள்.
நல்ல வாழ்க்கை வாழவதற்கான ஞானம் பெறுவீர்கள்.
ததாஸ்து...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (20-Oct-18, 8:44 am)
பார்வை : 3152

மேலே