வாழவைக்கும் நட்பு
வருடங்கள் பல கடந்தபின்னும்
ஆத்ம நண்பனவன் விருப்பத்தை
மறவாது ,குசேலன் ,கண்ணனுக்கு
மடியில் கட்டிவைத்த ஒரு பிடி
அவள் தந்தான் அவன் உண்டு மகிழ
உண்டு மகிழ்ந்தான் கண்ணன்
நண்பனின் தூய நட்பை அதில் கண்டான்
மெய்மறந்தான் எல்லையில்லா இன்பமுற்றான்
குசேலனை வாழவைத்தான் தன நட்பால்
இப்படி அவன் நட்பில் இவன், இவன் நட்பில் அவன்
என்றிருவரும் இன்புற்றனரே நட்பின் பாங்கில்.