நகர்ந்திட இயலுமா

அயல்நாட்டில் அரசியல் மாற்றங்கள்
மீண்டும் தூர்வார படுவார்களா மக்கள் /
நம்ப முடியவில்லை .

என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது
நம்பித்தான் நகர்ந்திட இயலுமா /
நம்பித்தான் அலைபாய்ந்தனர் அன்று
இன்றும் இனியும் வீணான சத்தங்கள் யுத்தங்கள் தாங்கிட
சக்தியும் இல்லை சனங்களும் இல்லை
இல்லை என்ற சொல்லிலிருந்து
புதுப்பிறவி எடுத்து மக்கள் ஏனோ இவ்வாழ்க்கை
என்றுதான் இன்றளவும் நாட்டில்
இயங்கத்தான் முடிகின்றதே நடைப் பிணங்களாக.

வாழ்க்கை என்பது பகடைக் காயாக உருண்டது கண்டோம்
ஒடுங்கிய இனமொன்று சரிந்தது பார்த்து
நெகிழ்ந்திட்டோம் அகிலத்தில் நாம் .
நம் குரலுக்கோர் சாட்சி இல்லை
,வெதும்பித்தான் வேதனையில் உழன்றோம்
எண்ணத்தில் வெற்றி உண்டு
அதை மன ஆழத்தில் கொண்டு இன்றும்
எதிர் நீச்சல் போடுகின்றோம்
.பதுங்கித்தான் பார்க்கின்றோம் .
பார்ப்பது வேடிக்கை பார்க்க அல்ல.
இனியும் கலங்காது மக்கள் வாழ கைகொடுக்க .





எடுத்த மக்கள்

எழுதியவர் : பாத்திமாமலர் (30-Oct-18, 11:02 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 161

மேலே