மீதம் இருந்தது உன் நினைவே

மீதம் இருந்தது உன் நினைவே

அலை அள்ளி சென்ற பின்பு
பிறழ்ந்துபோனே
பூமிதேகத்தின் எதோ ஓர்
மூலையில் கிளை கிடைக்காது
கத்துகின்ற சிட்டுக்குருவியை போல
எல்லாவற்றையும் எல்லோரும்
எழுதிய பின்பு எதை எழுதுவது
என்றெண்ணுகையில்
உன் நினைவு மட்டுமே
மீதமிருந்தது என் கவிதைக்கு
கருவாக
பிறகென்ன காகிதப்பற்றாக்குறைதான்

எழுதியவர் : இளவல் (30-Oct-18, 11:05 am)
சேர்த்தது : இளவல்
பார்வை : 112

மேலே