காதல் தந்த வலி

நேற்று வரை
என் அருகில் இருந்தாய்...

இன்று தொலைவில்!!!

நீ என்னை விட்டு
சென்றதால் என்னவோ
என் "இதயம்"
விட்டுவிட்டு துடிக்கிறது..!!

என் கண்கள் வழியே
உன் காதல்
கசிந்து கொண்டிருக்கிறது
கண்ணீராய்!!!

நிஜத்தில் தொலைத்த
உன்னை கனவில் தேடுகிறேன்...

உன்னிடம் தொலைந்த என்னை
இரவில் தேடுகிறேன்...

அன்பே!!!
உன்னை எண்ணி
நான் சிந்திய
கண்ணீர் துளிகளை விட
கவிதை துளிகளே அதிகம்..!

என்னால் முடிந்த வரை
பயணித்துக் கொண்டே இருப்பேன்
உன் நினைவுகளுடன்!!!

கவிதைகளின் காதலன்

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (3-Nov-18, 9:06 pm)
பார்வை : 2676

மேலே