தீ பந்து

கண்ணு ரெண்டு
தூங்க நெனைக்க
நெஞ்சிக்குள்ள
உன் நெனப்பு
குடை விரிக்க
என்னை தீண்டாமல்
பொழிந்த காதல் மழையில்
சொட்டு சொட்டாய்
கரைந்து
உன்மேல் திட்டு திட்டாய்
ஒட்டிக் கொண்டதென்ன
என் ஒத்த நாடி இதயம்....!

அன்பே!
நீ என்னுள் ஆர்ப்பரித்தாய்
கடலை விட பெரிதாக...
என் தனிமையிலும்
பூ பறித்தாய்
பூவினும் மென்மையாக....!

அழகிய நிலவொளியில்
விழும் உந்தன் நிழலொளியில்
எழுகின்ற கவிச்சுடரில்
குளிர் அடிக்க
வெயில் வந்து
குளிர் காய விரும்புதே
உந்தன் கண் ரெண்டின்
தீ பந்தின் மத்தியிலே...!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (4-Nov-18, 8:10 pm)
Tanglish : thee panthu
பார்வை : 60

மேலே