கவிதை ஹைகூ


பரணில் எடுத்த
குடை பிடித்தும் நனைகிறேன்
எலிப்புழுக்கை மணம்

பல்லிளிக்கும் ஒப்பந்தங்கள்
இனிப்புடன் கைமாறிய காசோலைகள்
வாய்பிளந்த வடிகால்கள்

வீட்டார் பார்வையில்
விரசாய் நடக்குது மகப்பேறு
செல்லப் பிராணி

அதிகாலைப் பொழுது
கதை பேசியவாறே நடக்கிறார்கள்
உடல் நலம்

பிச்சையிடாதே பரப்புரை
பாவங்களை தொலைப்பது எப்படி
விழிக்கும் பயணிகள்

எழுதியவர் : செல்லம்பாலா (7-Nov-18, 4:56 pm)
சேர்த்தது : chellambaalaa
பார்வை : 178

சிறந்த கவிதைகள்

மேலே