தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு மெய் உறக்கம் கவிஞர் இரா இரவி

தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு !

மெய் உறக்கம்! கவிஞர் இரா .இரவி !

மெய் உறக்கம் உறங்கி வருடங்களாகி விட்டன !
பொய் உறக்கம் உறங்கி பொழுது கழிகின்றது !

தொலைக்காட்சி வந்து தூக்கம் தொலைந்தது
தொல்லைக்காட்சியானது தொலைக்காட்சி !

தொடர்களுக்கு அடிமையாகி விட்டனர் நாளும்
தொடர்கின்றது இரவில் நெடுநேர விழிப்பு !

தொடர்களில் எதிர்மறை சிந்தனை போதிப்பு
தொலைந்து விடுகிறது நிம்மதியான உறக்கம் !

கெட்ட சிந்தனை நாளும் விதைக்கின்றனர்
கேட்ட காரணத்தால் போனது உறக்கம் !

இரவு உறக்கத்தை இல்லாமல் ஆக்கியது
இளசுகளோ கைபேசியில் மூழ்கியது !

அளவிற்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல
அலைபேசியும் நஞ்சு உணர்ந்திட வேண்டும் !

கணினியும் கண்களுக்கு இன்று கேடானது
கண்ட நேரம் நேரத்தை விழுங்கி விடுகிறது !

நாளும் அறிவியல் கண்டுபிடிப்பால்
நன்மையை விட தீமை அதிகமானது !

அன்று இல்லை தூக்கம் இன்மை
இன்று உள்ளது தூக்கம் இன்மை !

அன்று அதிகாலை எழுந்தனர் பலரும்
அதிகாலை எழுவது இல்லை என்றானது !

கோழித் தூக்கம் மனிதத் தூக்கம் ஆனது
கண்கள் காணவில்லை மெய் உறக்கம்!

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (15-Nov-18, 8:08 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 75

மேலே