மனம் எங்கே பாசம் எங்கே

மனிதனே மனம் எங்கே பாசம் எங்கே?
மனிதம் இழந்த உலகிலே மறைந்து போனதோ எங்கோ?
மானம் கெட்ட மனிதர்களால் மாண்டு விட்டதோ பாசமடா ../

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
மனமே இல்லாத மானிடர்கள்
வாழ்க்கை நடத்தும் உலகமடா
தாய் பாசம் மறந்து சேயை குப்பைத்
தொட்டி சேர்க்கும் பெண்மை வாழும் நாடடா
எட்டு வயதுச் சிறுமியை கூண்டோடு
சேர்ந்து கெடுப்போர் பாசமாக
வேசம் போட்டு வாழும் அகிலமடா ..../

மனமோ கல்லாகப் போனதால்
பாச மலர் மலராமல் போனதடா
மனமும் குணமும் மனிதனிடம்
மாண்டு விட்டதால் பாசமும் நேசமும்
பிறக்கவில்லை அவனோடு கேளடா .../

பணத்திமிரிலும் ஆட்சி வெறியிலும்
போதையிலுய் பேதை மேல் மோகத்திலும் புரண்டால் மனமும் பாசமும் நிலைத்திடுமோ இங்கே கூறடா .../

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (15-Nov-18, 7:31 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 220

மேலே