சுத்தமாக்கும் சூட்சமம்
கடவுளை இயம்பியவன் கச்சித கணக்கன்
கணாத ஒன்றை காண வழிவகை சென்னானே
கருத்தால் மட்டும் அறிவதை
காட்சிப் படுத்தி கோயில் வைத்தானே
பாவம் புண்ணியம் என்றே சொல்லி
பகுத்தறிய பக்குவ பாடம் வைத்தானே
பயிலா மாந்தர் மனதில் கூட பதியும்படி
பாசாங்கு கதைகள் பலவகை படைத்தானே
அத்தனையிலும் நம்மை நித்தமும்
சுத்தமாக்கும் சூட்சமம் உள்ளதைய்யா
நன்னாடன்