திருமணம்
என்னைக் கேட்டால்
உலகின் விடைதெரியாத புதிர்களில்
இதுவே தலையாயது என்பேன்...
பல குழப்பங்கள் மனதில் ஓட
சில தோழிகள் தங்களது
கருத்துக்களை பகிர்ந்தனர்...
உடையை மாற்று
உனக்கானவனுக்கு உன்னை பிடிக்கும்
என்றாள் ஒருத்தி...
சிரிப்பை சிதறவிடு
சட்டென நடக்கும்
என்றாள் ஒருத்தி...
எதிர்பார்ப்புகளை எட்டிப்பிடி
எண்ணப்படி அமையும்
என்றாள் ஒருத்தி...
உன்னையே நீ மாற்று
மற்றவர்க்கு பிடிக்க
என்றாள் ஒருத்தி...
இத்தனை கற்கள் விழுந்தவுடன்
தெளிந்த நீரானது - என் மனம்...
என் சுயத்தையும், இயல்பையும்
விரும்பாத எவரும்
என் துணையாக முடியாதென்று...