உன்னை சந்தித்த வேளையில்
உன்னை சந்திக்கும் வேளையில்
தொலைதூர விண்மீனை
தொடநினைக்கும் குழந்தையானேன்..
இதென்ன அதிசயம்
இதயத்துடிப்பு இருமடங்காகிறது..
உன் விழிஈர்ப்புவிசையின் முன்
புவிஈர்ப்பு விசையெல்லாம்
பொய்யாய் போனதென்ன விதி?
மேகம் தாண்டி பறக்கும்
பறவையைப் போல...
திசைகளறியாது பறக்கிறது என் மனம்..
இப்போது என்செய்வேன்...
நிலவொளியில் தேவதையாய்
நீ நடந்து வந்த காட்சி எல்லாம்
இருகண் கொண்டு பார்த்த தென்றோ
இறைவன் தந்த வரம் எனக்கு...
நீ கண்ணிமைக்கும் நேரம்
காற்றும் திசைமாறுகிறது..
என் இதயம் மட்டும்
விதிவிலக்கா என்ன?
உன்னை நான் சந்தித்த வேளையில்
அது உன்னிடமே சரணடைந்தது.....
- மணிகண்டன்