சாபமா சவாலா

தொட்டு போகும் மழை
வெறிச்சோடும் வானம்
உருண்டோடும் கருமேகம்
கண்சிமிட்டும் வேளையில்
கவிழ்த்துக் கொட்டுவது போல்
இடிமுழக்கம்
அதனூடே பளிச்சிடும் மின்னல்
பயங்காட்டும் அற்புத வானம்

வானிலை அறிக்கையில்
கனமழை சென்னையில்
பள்ளிகள் விடுமுறை
ஏமாற்றும் மழை, கனமழை வாபஸ்
இயற்கையில் பருவமழை
பெய்யாது பொய்த்து விட்டால்
தண்ணீர் பிரச்சினை தாண்டவம் ஆடும்
இயற்கையே இறைவன் கொடுத்த
கடமையை சரிவர செய்யாது போனால்
இயற்கையை நம்பி வாழும் மனிதன்/
என்ன செய்யலாம்

வந்தால் ஒரேயடியாக கொட்டி தீர்க்கிறாய்
இல்லையென்றால் இல்லை
இது என்ன சாபமா / சவாலா /
உயிர்கள் வாழும் உலகில் எல்லாம் நீ வேண்டும் ,
உலகம் யாவிலும் உயிர்கள் வாழ
மழையே பொய்க்காதே, ஏய்க்காதே

எழுதியவர் : பாத்திமாமலர் (5-Dec-18, 11:26 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 117

மேலே