என்னவளின் தரிசனம்

பொழுதெல்லாம்
வழி மீது விழி வைத்துக்
காத்திருக்கிறேன்
என்னவளின் முகத்தைக் காண
தரிசனம் கிடைப்பது நிச்சயம் அல்ல
ஆனால்
இரவுப்பொழுதில்
கண் மூடி நான் அயர்ந்தால்
நித்தமும் கிடைக்கிறது
என்னவளின் தரிசனம்

எழுதியவர் : கீர்த்தி (12-Dec-18, 12:29 pm)
பார்வை : 486

மேலே