ZEBRA LINE

ZEBRA லைனில் நடந்து வந்தவளை
கையைப் பிடித்து இழுத்தேன்
நன்றி சொன்னாள் !
கையைப் பிடித்து இழுத்தத்திற்காகவா ?
சிக்னலை கவனிக்காமல் வந்த போது
குப்பென்று சாலை வாகனங்கள் கிளம்பிய
அந்த நொடியில் ...காப்பாற்றியதற்காக !
முகத்தில் அதிர்ச்சி நெஞ்சில் கைவைத்தவாறு
கடவுள் காப்பாற்றினார் என்றாள்
ஒரு நொடியில் மறந்து விட்டீர்களே ...!
நானல்லவா காப்பாற்றினேன் என்றேன்
வெட்கத்துடன் சிரித்தாள்
மீண்டும் நன்றி சொன்னாள் ....விடை பெற்றாள் !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jan-19, 7:03 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே