பள்ளிக் காதல்
நீ அமர்ந்த மேஜையில்
படுத்துறங்க என்
விழிகள் கேட்குதடி
நீ வரைந்த ஓவியத்தில்
வண்ணங்கள்
வானவில்லாய் மாறுதடி
உன் கால்கொழுசொலியால்
கீச்சிடும் பள்ளி இரும்புக்கதவும்
இசையாகுதடி
தூசித் தட்டும் துணி கொண்டு
மனதை சுத்தம் செய்தாயடி...
விடுமுறை நாட்களில்
பள்ளியின் பாதைப்புற்களோ
உன் வருகைக்கு ஏங்குதடி...
கரும்பலகையும் விடுமுறையை வெறுத்ததடி...
சுண்ணாம்புக்கட்டியோ தன் விரல்பிடிக்க உனை வேண்டுதடி...
என் அருகில் நீ
உண்ண உன் மதிய உணவு
உலகம் மறக்க உன் பேச்சு
நானும் நானப்பட உன் இரட்டைச்சடை
நான் நுகர உன் கூந்தல்மலர்
என் விரலோடு உன் விரல்
கைக்கோர்த்து நாம்
(அரசியலும் ஊலலுமாய்)
பிரியாமல் நாம்
யாங்கண்ட கனவே
காலையில் மறந்திராமல்
காலத்தின் கடைசி நாள் வரை
தொடர்வாயோ???