மணி ராக்ஸ் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : மணி ராக்ஸ் |
இடம் | : அறந்தாங்கி |
பிறந்த தேதி | : 20-Nov-2003 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Nov-2018 |
பார்த்தவர்கள் | : 2023 |
புள்ளி | : 24 |
தமிழின் பெருமையை போற்றுபவன்
தவளைகளின் நீங்காத இசைகள்....
இலையோரம் தேங்கிய மழைத்துளி....
சாலையெங்கும் நிலவின் பிம்பம்....
குழிகள் தோறும் நிரம்பிய சாக்கடை....
இரவு முழுதும் கொசுக்களின் ரீங்காரம்....
காலை வரை அகலாத போர்வைகள் ....
குளிர்ச்சி தரும் வாடை காற்று ....
அன்று மட்டும் ஓய்வெடுத்த மின்விசிறி....
ஓர் இரவில் நிரம்பிய ஆழ்க்கிணறு ....
மின்விளக்கை சுற்றி வரும் ஈசல் கூட்டம் ....
அபூர்வமாய் வந்தடைந்த மின்மினிகள் ....
குரல் மாற்றிய ரேடியோ ஒலியலைகள் ....
தூரல் வருமுன் துண்டித்த மின்னிணைப்பு....
அலையடித்த தொலைக்காட்சி பெட்டிகள்....
தூக்கம் துரத்திய இடி மின்னல்கள்....
இவை அனைத்தையும் தந்தது
ஓர் " மழை பேய்ந்த இரவு !!
மழை தீண்ட மிளிரும் கண்ணம் ...
விரல் தீண்ட சிலிர்க்கும் தேகம் ...
தொட்டால் கீறி விடும் புருவம் ....
இரட்டை விரலால் கோதும் கருந்தூரிகை ...
வெள்ளை தீயில் கறுத்த வேள்விழி ...
ரேகைகள் கோலமிடும் பூக்கரம் ...
ஆழியிலே இசைக்கூட்டும் தேன்குரல் ...
முத்தத்தில் சத்தமிடும் செவ்விதழ் ...
செந்தமிழ் விளையாடும் செந்நா ...
ஏனோ என்னை எதிர்நோக்கும் பார்வை ...
நாணத்தில் முக்குளிக்கும் பூமுகம் ...
கல்லும் குழையும் மழலை சிரிப்பு ...
நிழல் தீண்ட துடிக்கும் பாதம் ...
அகராதியில் இல்லாத பேரழகு ...
என் இதயத்தை நிறப்பிய உன்னை
என் கவிதைக்குள் நிறப்ப முயன்றேன் , தோற்றே போனேன் !
எதிலிலும் நிறையாதவளாய் ,
என் கனவோரம் ப
இன்னும் உயிர் பிழைத்து கொண்டு தான் இருக்கிறது
இந்த சாதி...
அன்றைக்கும் இன்றைக்கும் வெறும் உடைகள் மட்டும் தான் மறுவியுள்ளது
எண்ணங்களும் முடிவுகளும் பழையபடியே...
சாதி,
வீடுகளில் அடையாளமாய்,
மனித பேய்களுக்கு குருதியாய்,
வேலைகளுக்கு முன்னுரிமையாய்,
வாகனங்களில் விளம்பரமாய்,
பெயருக்கு பின் அடைமொழியாய்,
அரசியலில் அசையா தூணாய்,
கரங்களில் தோறும் கயிறாய்,
பெரியாருக்கு மட்டும் துச்சமாய் ,
இன்னும் உயிர் பிழைத்துக்கொண்டு தான் இருக்கிறது...
சாதி வேற்றுமை இன்னுமா இருக்கிறது என்று
பலருக்கும் ஆச்சர்யப்படும் வகையில் மிக
மௌனமாய் நடந்துகொண்டிருக்கிறது இந்த சாதி வேற்றுமை
கல்வியிலும்
உலகிது தானா !
சுழலுது தானா !
மழையிது தானா !
பொழியுது தானா!
நீளும் பாதை எனக்கென எண்ணி நானும் நடக்கிறேன்
வாழ்வின் தேவை நீ என அறிந்து நாளும் தொடர்கிறேன்
உனைத் தேடி அலைந்து நானும் இங்கே மெல்ல தொலைகிறேன்
உனை கண்டபின்பு என்னாசை சொல்ல விழைகிறேன்
செவிகள் கேட்டிடா பாடல் இங்கே நான் பாடினேன்
மொழிகள் அறியா வார்த்தைகளால் உன்னை பாடினேன்
மேகம் பொழியும் உதிராய் நானே உன்னில் விழுகிறேன்
ஏக்கம் தீரும் ஆசை கொண்டு நித்தம் எழுகிறேன்
கனவில் தோன்றும் முகங்களில் யாவும் உனை காண்கிறேன்
கவிதை பேசும் உன் இதழ்களில் எனை காண்கிறேன்
செடிகள் உறங்கும் சமயம் பார்த்து பூக்கள் எடுக்கிறேன்
நிலவுதித்தபின் பூக்கள் செதுக்கி உனக்காய் கொடுக்கிறேன்
வானம் தேடும்
ஒரு கவிஞனுக்கு
அதிகபட்ச சந்தோசம்
பணமல்ல
படைப்புக்கான பாராட்டு
அதிகபட்ச துக்கம்
படைப்புகள் நிராகரிப்பு
நெல் விளைந்த பூமியிலே
புதர் புதராய் முட்செடிகள்
நீரும் இல்லை ஓட்ட ஏறும் இல்லை
காரால் விளையும் கார் நெல்லும் இல்லை
கரம்பாய் மாறி கனலை வாங்கி
தரிசாய் தவிக்கும் பசித்த பூமியை
வசிக்கும் இடமாய் மாற்ற துடிக்கும் மனிதரால்
வளங்கள் எல்லாம் வழக்கொழிந்து போனதே
கிடைத்த நிலத்தின் வளத்தைக் கூட்டி
தழையால் எருவால் சத்தைப் புகுத்தி
விதைத்த எவற்றையும் புனிதமாய் பார்த்த
விண்ணவருக்கு இணையான விவசாயியைப் போற்று
பழமும் காயும் பல்வகை உணவும்
சுவையும் மணமும் சுழ்நிலை யாவும்
படைத்தவன் வாழ்வில் பல்வகைத் துன்பம்
களைவதை விரும்பா கூட்டத்தினாலே சாவை நோக்கி விவசாயம்.
---- நன்னாடன்.
௧. கவிதை ஐந்து வரிகளுக்குள் இருக்க வேண்டும்
௨ . யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்
௩ பரிசு COURIER ல் அனுப்பப்படும்
நிலவு தூங்கும் தருணம் தேடி
காலை எழும் சூரியன்
தூக்கம் துரத்தும் தவளை சத்தம்
நிறுத்த இரவில் முளிக்குதே
மாலைத் தேடும் மஞ்சள் கதிரும்
நிலவுக்காக ஏங்குதே...
மாலைத் தேரும் சம்மங்கி யாரும்
மணக்க ஊர்வலம் அரங்கேருதே
பல்லாங்குழியின் குழியை விட
வானீர்(மழை) அமைத்திடும் குழியதில்
நீந்தி
நெகிழ்ந்து
ஈந்து
உவந்து
தெரிக்கும் நீர்துளியில் நனைந்திட
புல்வெளி தன் மடியினை
காற்றில் விரிக்கிறது
சாலைக் கடக்க
அங்குமிங்கும் வீழும்
நெகிழியாய் அல்லாமல்
நேரே விழும் மழையை ரசிக்க விழாவிற்கு பின்
வீடு திரும்பும் உறவுகளாய்
வந்தடைகிறது
வானவில் ...
- மணிகண்டன்
கவிதை
காட்டருவி கொட்டிய சப்தத்திலும்
காட்டுவாசி தட்டிடும் பறையிலும்
ஈடில்லா இசையை
அள்ளித்தெளித்த ஆரமுதே...
சொல்லணா உணர்வுகளை
சொடுக்கிவிட்ட சொற்பதமே...
அழகியே...
உனை மெய்ப்புணர்ந்து
ஒத்திசை பண்பினால்
ஒலி அமைத்து
காலத்திற்கு காலம்
தானே புதுப்பித்துக் கொள்ளும்
சொற்களஞ்சியமே...
தனிமைச் சிறையில்
தவித்தவர்களை
ஆறத் தழுவிய அற்புதமே...
ஈரைந்து ஈன்றவள் போல்
சுகம் காண்கிறோம்
உன்னைத் தழுவிடும் நொடிகளில்...
பாரதி கிருஷ்ணா
காலையில் ஆறு மணிக்குள் எழுந்து
பிள்ளைகளுக்கு பள்ளி உள்ளதோ இல்லையோ
அவர்களையும்
சேர்த்து எழுப்பி
நேற்றின் கலைப்போடு முகமுதிர்ந்து
முடிதிருத்த சவரக்கத்தி எடுத்தால்
அது துறுப்படித்திருக்கும்
அதை மாற்றினால் இன்னொரு செலவு வருமே என் எண்ணி
அந்த கத்தியிலேயே சவரம் செய்து
குளித்துவிட்டு சாப்பிட வந்தால்
நேற்று மிஞ்சிய சாதமும்
இன்றைய தோசையும் இருக்கும்
சுவை வாய் வரைதான் என்று பழையசாதத்தையும் சலிக்காமல் சாப்பிட்டு
வேலைக்கு செல்ல பறப்பட்டால்
வண்டியிலோ எரிபொருள் இருக்காது
பிள்ளைகளை வேறு பள்ளியில் விட வேண்டும்
சரி என சொல்லி
பேருந்தில் ஏறி
பிள்ளைகளையும் பேருந்தில் ஏற்றி
பள்ளியிலே விட்டு விட்டு
அலுலகம் சென்றால
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!
காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .
பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!
வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!
தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ