அது வேண்டாம்

காட்டி லெங்கும் அலைந்தேதான்
கண்ட யிடத்தில் நீரருந்தி,
வாட்ட மின்றியே வளர்ந்திருந்த
வனத்து யானையைப் பிடித்துவந்து,
கூட்டமாய் மனிதர் சேர்ந்துவரும்
கோவில் தலங்களில் பழக்கியதை
ஆட்டம் காட்டுதல் அதுபோதும்,
அலைந்தே இரந்திட வேண்டாமே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (20-Jan-19, 6:53 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 223

மேலே