தாழ்ந்தவனை உயர்த்தும் பேனா முனைகள்

பேனா முனைகள்
பேனா முனைகளும் தாளின் பக்கங்களும் முத்தமிட்டு கொண்டால் மட்டுமே நாம் முன்னேற முடியும்......


தாழ்ந்தவனை உயர்த்துவதும்
உயர்ந்தவனை தாழ்த்துவதும் பேனா முனைகள் மட்டுமே.....

ஒருமுறை பேனாவின் முனையினால் கீச்சிடு,
நீயே உலகின் மிக பெரிய செல்வந்தன்....

தன் அறிவால் தோன்றிய ஒவ்வொரு வார்த்தைகளையும் கோர்த்து
பேனா முனையினால் தீட்டி விடு அதுவே உன் உயிர்.....
அந்த உயிர் இந்த உலகம் அழியும் வரை வாழ்ந்துகொண்டு இருக்கும்...

கத்தி முனைகள் திருடனை போல் பிறரிடம் இருக்கும் மையை எடுக்க மட்டும்தான் தெரியும்.....
ஆனால் பேனா முனைகள் அப்படி இல்லை தன்னிடம் இருப்பதை பிறரிடிம் குடுத்து உதவும்......


பேனாவின் முனைகளை கையினுள் அடக்கி வைத்துப்பார்,
நாளைய உலகம் தானாக வந்து உன் கையினுள் அடங்கிவிடும்...

எழுதியவர் : மு.சண்முகநாதன் (27-Jan-19, 10:53 am)
சேர்த்தது : சண்முகநாதன்
பார்வை : 52

மேலே