மீனவனின் வருகைக்காக...

கடலே கதியென கணவன் கிடக்க
அடலே சதியென அணலும் கடக்க
மடலே நிதியென பணமும் மடக்க
உடலே விதியென உணவும் முடங்க...

விழியே விதிதுற விடியல்வரை விம்மியழ
மொழியே மதியுணர மடியும்வரை உம்மைத்தொழ
வழியே உதிரக்குழாய் வெடிக்கும்வரை உயிர்த்திருப்பேன்
பழியே புதிரானால் வடிவங்களால் வாழ்த்துரையேன்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (31-Jan-19, 12:40 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 36

மேலே