நன்மை செய் அதுவும் நினைத்த அக்கணமே
நல்லவைத்தேடுவதிலும்
நன்மை பயக்கும் ஓர்
செய்யலை செய்வதிலும்
தயக்கம் ஏதும் கூடாது
அவ்வெண்ணங்கள் தோன்றும்
அக்கணமே அவற்றைப் இறுகப்பற்றி
செயல் படுதலே நன்று, ஏனெனில்
மனிதன் மனமோர் குரங்கு
அடுத்த நொடியிலேயே எண்ணங்கள்
மாறி நம் செயலும் மாறிடுமே.