காதல்
காதல்!❣
வாசல் கதவைத் தட்டத் தபால்காரனும் அல்ல!
பருவத்தில் தோன்றி மறையக் குறிஞ்சி பூவும் அல்ல!
காதல்! ஜாதி, மதம், இனம், மொழி இல்லாத வெறும் உணர்ச்சிகளின் உரையாடல்.
உலகில்! காதலிப்பவர்களுக்கு அறிவுரை கிடையாது.
காதலர்களுக்கிடையே அறிவுக்கு வேலை கிடையாது.
காதல்! வந்துவிட்டால் ஏன் வந்தது என்று கவலை?
வரவில்லை எனில் ஏன் வரவில்லை என்று கவலை?
காதல்! ஒரு சாகாவரமா? இல்லை சாகா சாபமா?
அறிந்தவர் எவரும் இவ்வுலகில் இல்லை!!!