பண் பாட பலந்தருவாயோ 622019

நெடும் பகை அகல நின்நெடும்
அடியை பற்றி அல்பகல் தோறும்
ஆற் றொன துயரம் களைந்திட
அரவம் சூடிய அண்ணலை ஏத்துவம்

அன்பது அவியாப் பண்பதை பெறவும்
ஆற்று மளவுக்கே துன்ப மதுநிறையவும்
அல்லல் களைந்து நல்லவை பேணவும்
விரிஇருள் பகையை வென்ற வனையேத்துவம்

கங்கை சிரசில ணிந்த கார்மேகனே
கண் ணியமிக்க கடுந் தவத்தனே
உண் ணினில் கலந்தே உறைந்தேனே
பண் ணிசைப் பாடபலந் தருவாயே !
__ நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (6-Feb-19, 10:38 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 71

மேலே