முதுமொழிக் காஞ்சி 74

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
குறளைவெய் யோர்க்கு மறைவிரி யெளிது. 4

- எளிய பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், குறளைச் சொல்லை விரும்புவார்க்கு ஒருவன் மறையச் செய்ததொன்றனை வெளிப்படுத்திப் பிறரையறிவித்தல் எளிது.

கருத்து கோட்சொல்லும் இயல்புடையோர் பிறருடைய இரகசியங்களை எளிதில் வெளியிடுவர்.

குறளை - புறங்கூறுதல். மறை - மறைவானது, இரகசியம்.

விரி - (விரித்தல்) முதனிலைத்தொழிற்பெயர்: பரப்புதல் : பலர் அறியச்செய்தல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Feb-19, 5:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 87

சிறந்த கட்டுரைகள்

மேலே