தமிழே நீயொரு இனிய கலை
தமிழே நீயொரு இனிய கலை
***********************************************************
தமிழே நீயொரு இனிய கலை --உனைத்
தழுவிக் கொண்டோடும் கவிதை அலை !
அமிழ்தாய் இனித்திடும் உனது சுவை --அதை
ஆழ்ந்து சுவைப்பது எனது நிறை !
பண்ணோடு சேர்வது உனது இசை - அதைப்
புண்ணின்றிக் காப்பது எனது இசை !
அரங்கத்து ஏற உனது நடை --அங்கு
கரங்கெனச் சுழலும் ஓசை அலை !
சங்கம் கண்டது உனது தளை -- அதில்
அங்கம் வகிப்பதோ எனது தலை !