தமிழே நீயொரு இனிய கலை

தமிழே நீயொரு இனிய கலை
***********************************************************

தமிழே நீயொரு இனிய கலை --உனைத்
தழுவிக் கொண்டோடும் கவிதை அலை !

அமிழ்தாய் இனித்திடும் உனது சுவை --அதை
ஆழ்ந்து சுவைப்பது எனது நிறை !

பண்ணோடு சேர்வது உனது இசை - அதைப்
புண்ணின்றிக் காப்பது எனது இசை !

அரங்கத்து ஏற உனது நடை --அங்கு
கரங்கெனச் சுழலும் ஓசை அலை !

சங்கம் கண்டது உனது தளை -- அதில்
அங்கம் வகிப்பதோ எனது தலை !

எழுதியவர் : சக்கரைவாசன் (8-Feb-19, 7:53 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 251

மேலே