காதலர் தினம்
இது காதலர்கள்
காது அலர்களாய்
மாறும் தினம்
காதலனாய் இருந்தவன்
கவிஞனாய்
நேரும் தினம்
மன்மதன் கோயிலில்
அன்று திருவிழா
மலர்களின் விலை
ஏறும்
புதர்களில் அலைமோதும்
அன்று காகிதங்கள் எல்லாம் கடிதங்கள் ஆகும்
முறைத்த பெண்
முறைப்பெண்ணாக நேரும்