காத்திருக்கும் என் காதல்

எம்
உணர்வுகள் ஒன்றாகி
திருநாள் கொண்டாட எண்ணியே
உறவாக வைத்தேனே உனையே...
அஞ்சல் இடாத காகிதமாய்
குப்பைத்தொட்டிக்குள் வீசி
விட்டெறிந்து சென்றாய் எனையே...
கண்ணுக்கு இமையாக இருப்பேன்
இருப்பேன் என்றாயே -அன்று
ஆனால் இன்று
கண் குத்தி சென்றாயே.
பூவே.................
ஏமாந்தது நான் அல்ல
உன் வாழ்வே
புரிந்து கொள்ளும் நாள் வரும்
அந்நாளும் வருந்தாதே -ஏனெனில்
அன்றும் உனக்காய் நானிருப்பேன்...

எழுதியவர் : janaarthanan (30-Aug-11, 12:26 pm)
சேர்த்தது : janaarthanan
பார்வை : 628

மேலே