ஆற்றல் உடையார்க்கும் ஆகாதளவின்றி ஏற்ற கருமஞ் செயல் – மூதுரை 11
நேரிசை வெண்பா
பண்டு முளைப்ப தரிசியே யானாலும்
விண்டுமி போனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்ற லுடையார்க்கும் ஆகா தளவின்றி
ஏற்ற கருமஞ் செயல். 11 – மூதுரை
பொருளுரை:
உமி நீங்குதற்கு முன்னே முளைப்பது உமி நீக்கப் படாத அரிசியே ஆனாலும் உமியை நீக்கியபின் அந்த அரிசி முளைக்காது;
அதுபோல தாம் அடைந்த வல்லமை பெரிதாக உடையவர்க்கும், தகுந்த துணை வலிமை இல்லாமல் எடுத்துக் கொண்ட செயலை செய்து முடிப்பது எளிதில் இயலாது.