நல்லார் ஒருவர் உளரேல் எல்லார்க்கும் பெய்யும் மழை – மூதுரை 10

நேரிசை வெண்பா

நெல்லுக்(கு) இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு)
எல்லார்க்கும் பெய்யும் மழை. 10 மூதுரை

பொருளுரை:

நெற்பயிருக்கு இறைக்கப்பட்ட தண்ணீர் வாய்க்கால் வழியாகச் சென்று அருகாமையிலுள்ள புற்களுக்கும் கசிந்து பசுமையைத் தரும்.

அதுபோல, நீடித்த இவ்வுலகத்தில் நல்லவர் ஒருவர் இருப்பாராயின் அவரது நற்குணத்திற்காகப் பெய் யும் மழை, உலகத்தில் உள்ளோர் அனைவருக்கும் பெய்து நன்மை பயக்கும்.

கருத்து:

நூற்றுக்கு ஒருவன் நல்லவனாக இருந்தால் கூட அவனைச் சேர்ந்த எல்லோரும் பயனடைவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Feb-19, 8:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25069

சிறந்த கட்டுரைகள்

மேலே