வீரவணக்கம்

பதைக்கின்றது மனம் /
அங்கும் இங்கும் உலாவும்
பதிவுகளை நோக்கையிலே/
துடிக்கின்றது ஆத்மா உதிரம்
சிந்தி உயிர் அற்ற உடல்களின்
புகைப் படங்களைப் பார்க்கையிலே/

கக்கத்தான் சொல்லுகின்றது
மனம் விசமச் சொற்களை /
நாவடக்கம் செய்து விட்டேன் /
நோவு அடங்கவேயில்லை
இன்னும் நெஞ்சினிலே /

ஜெய்ஹிந்த் என்று வீர முழக்கமிட்டு/
பீரங்கி குண்டுகளை வேகமாய்
பறக்க விட்டு /
உடலுக்கு மரியாதை செய்தாலும்/
பிரிந்த உயிர் திரும்பிடுமோ?
இழந்த சொந்தம் எழுந்து வந்திடுமோ?

அக்கினிக் குச்சுகளை
அக்கினிக்கே இரையாக்கி விட்டு/
அடங்கிப் போகலாமோ?
பாரதி சொல் போலே
போர் தொடுக்க வேண்டுமடா /

பதற வச்சு கதற வச்சு/
கலங்க வச்சு நடுங்க வச்சு/
ஒடுங்க விட்டு ஓட்டம்
காட்ட வேண்டுமடா /

இரங்கல் தெரிவிப்பது பெரிதல்ல /
இறங்கி அடிக்க வேண்டுமடா/
இறந்தவன் ஆத்மாக்கு சாந்தி கிடைக்க அவைதான் நாம் செய்ய வேண்டுமடா/

தமிழா தலை நிமிரடா /
தொலையும் உரிமையை
துழாவித் தேடி வெல்லடா/
இறப்பு என்பது உறுதியே /
உரிமைக்காக உயிர்
கொடுப்பதில் பெருமையே /

உயிர் திறந்த
வீரர்களுக்கு வீரவணக்கம் 💪
அனைவரின் ஆத்மா சாந்திக்கு
இறைவனைப் பிராத்திப்போம் 🙏😢

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (15-Feb-19, 6:02 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 654

மேலே