எந்தக் காதல் மணக்கும்

எந்தக் காதல் மணக்கும்
***********************************************

கனமின்றி குணத்தோடு மனமிரண்டும் ஒன்றிணைந்து
இனவழி நோக்காது ஈனவகை பற்றாது
சண நேரம் நகைத்து வெகுநேரம் சினம்கொளாது
முனகலும் முக்கலும் இல்லாத நிலைகொண்டு
தனவளம் அற்றாலும் தானமாய் தனைத்தந்து
ஓணானும் படர்கொடியும் ஒன்றிணைந்த நிலையொத்து
வானமும் மேகமுமாய் இணைபிரியா இயற்கையாய்
மோனையும் எதுகையும் இணைந்த கவிதையென
அணிந்திடும் சந்தனத்தின் சுகமான நறுமணமாய்
மணந்திடும் காதலே நல்லதோர் காதல் !

எழுதியவர் : சக்கரைவாசன் (18-Feb-19, 6:10 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 264

மேலே