பாலைவனத்தில் முளைத்த ஒற்றைச்செடி

கனவோடு வாழ்ந்தே
கறைந்த்துப் போகிறேன்
,
கரை இல்லா ஆற்றில் சிக்கி
தத்தளித்து மூழ்கிறேன் …!!

சிந்தும் கண்ணீரில்
ஆனந்தம் காண்கிறேன்,
சிந்து பாடியும்
முகாரியில் முடிக்கிறேன்..!!

ஆகாயம் எங்கும் மேகம் இருந்தும்
நீர் காணா பயிராய் வாடுகிறேன் ,
ஆசையாக பேசிப்பிரிந்த
உறவுகளை எண்ணி வருந்துகிறேன் ..!!

பாசம் காட்டி தூக்கி எரிந்த
பொம்மையாய் வீழ்கிறேன்,
பாலைவனத்தில் முளைத்த
ஒற்றைச்செடியாய் வாழ்கிறேன்
.!!

அடங்கி மடிந்து போகி
இந்த மண்ணுக்கு உரமாகும்
நாளுக்காக ஏங்குகிறேன் ..

என்றும் ...என்றென்றும் …
ஜீவன்

எழுதியவர் : jeevan (22-Feb-19, 7:15 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 255

மேலே