நீ என் பூக்களை பறித்திருக்கலாம்

நீ
என் பூக்களை கொய்திருக்கலாம்...

நீ
என் இலைகளை பறித்திருக்கலாம்...

நீ
என் கிளைகளை வீழ்த்தியிருக்கலாம் ...

ஆனால் என் வேர்கள்
பத்திரமாக இருக்கின்றன....

சில கால இடைவேளையில்
நீ கவனிக்கையில்

நான் பூத்து குலுங்கும்
மரமாகியிருப்பேன்....

எழுதியவர் : சிவா. அமுதன் (22-Feb-19, 7:31 am)
சேர்த்தது : சிவா அமுதன்
பார்வை : 171

மேலே