கவிதை

வேரின்றி மரம்
இல்லை

மரமின்றி வேர்
இல்லை

நீரின்றி கடல்
இல்லை

கடலின்றி நீர்
இல்லை

நீயின்றி நான்
இல்லை

நானின்றி நீ
இல்லை

உயிரின்றி உடல்
இல்லை

உடலின்றி உயிர்
இல்லை

காதலின்றி கவிதை
இல்லை

கவிதை இல்லா
காதல் இல்லை

காதல் இல்லா
கவிதை இல்லை

சார்ந்து இருத்தலே
இந்த

உலகின் நிலை

சாராது இருப்பது
எதுவும்

உலகில் இல்லை

இது
உலகியல் சொல்லும்

அர்த்தமுள்ள கவிதை

இதை
உணர்ந்தவன் எழுதிய

அழகான கவிதை

எழுதியவர் : நா.சேகர் (7-Mar-19, 1:42 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kavithai
பார்வை : 423

மேலே