ஹாஸ்ய கவிதை

ஏனத்தில் பால்காரன்
பால்காரன் கொண்டுவந்த
பால் நீரில் கலந்த பாலா
பாலில் கலந்த நீரா என்று
என்னவள் எனைக்கேட்க
'அடியே, நீதான் அன்னமல்லவா?
என்றேன் …..ஒரு நொடிக்குப்பின்
அவள் சிரிக்க , வெட்கமில்லாமல்
பால்காரனும் சிரித்தான்
நகையின் ரசிப்பில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (8-Mar-19, 4:22 pm)
பார்வை : 86

மேலே